கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிகர லாபம் 84 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இது குறித்து வங்கியின் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி முகர்ஜி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது: லக்ஷ்மி விலாஸ் வங்கி கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிகர லாபமாக ரூ.10.50 கோடியை ஈட்டியுள்ளது.
மதுரையில் உள்ள இரு கிளைகளில் தவறான ஆவணங்கள் மூலம் ரூ.80.43 கோடி தொழில் கடன் பெறப்பட்டுள்ளது. இது குறித்து முûறாக விசாரணை நடத்தி அதைத் திரும்ப வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வாராக்கடன் அதிகரித்துள்ளதால் நிகர லாபம் 84 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இரண்டாவது காலாண்டில் வங்கியின் மொத்த வர்த்தகம் 11.62 சதவீதம் அதிகரித்து ரூ.52,386 கோடியாக உள்ளது. கடன் அளிப்பு ரூ.20,253 கோடியிலிருந்து தற்போது ரூ.23,215 கோடியாக அதிகரித்துள்ளது. டெபாசிட் தொகை 9.34 சதவீதம் அதிகரித்து தற்போது ரூ.29,171 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர வட்டி வருமானம் (என்ஐஐ) ரூ.364 கோடியிலிருந்து தற்போது ரூ.450 கோடியாக அதிகரித்துள்ளது என்றார்.