பிரிண்டர், கேமரா தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் கேனான் நிறுவனம் இந்தியாவில் விற்பனையை அதிகரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சென்ற நிதி ஆண்டில் ரூ.2,600 கோடி விற்பனையை எட்டிய அந்நிறுவனம் அடுத்த இரண்டே ஆண்டுகளில் இரட்டை இலக்க வளர்ச்சியுடன் ரூ.3,500 கோடி விற்பனையை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதற்காக, பிரிண்டர், கேமரா பிரிவுகளில் நவீனரக புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் பணிகளில் கேனான் தீவிரமாகியுள்ளது.
மெட்ரோ நகரங்களைக் காட்டிலும் சிறிய நகரங்களில் விற்பனை குறைவுதான். இருப்பினும் சிறிய நகரங்களை நோக்கிதான் தனது பயணம் என்று தெரிவித்துள்ளது.