வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை வர்த்தகம் விறுவிறுப்பாக நடைபெற்றதால் நாள் இறுதியில் மும்பை பங்குச் சந்தை புதிய உச்சத்தை தொட்டது.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 330.87 புள்ளிகள் உயர்ந்து 38,278.75 புள்ளிகளில் நிலைபெற்று புதிய உச்சத்தை தொட்டது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 81 புள்ளிகள் பெற்று 11,551.75 புள்ளிகளில் நிலை பெற்றது.
சென்செக்ஸ் இன்று அதிகபட்சமாக 38,340.69 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 38,050.69 புள்ளிகளையும் பெற்றது.
நிஃப்டி அதிகபட்சமாக 11,565.30 புள்ளிகளையும், குறைந்தபட்சம் 11,499.65 புள்ளிகளையும் தொட்டது.