சர்க்கரை ஏற்றுமதிக்கான காலக்கெடு நீட்டிப்பு

மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதிக்கான காலக்கெடுவை டிசம்பர் வரையில் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
சர்க்கரை ஏற்றுமதிக்கான காலக்கெடு நீட்டிப்பு

மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதிக்கான காலக்கெடுவை டிசம்பர் வரையில் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
 இதுகுறித்து மத்திய உணவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 நிர்ணயிக்கப்பட்ட சர்க்கரை ஏற்றுமதி இலக்கில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே இதுவரையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, ஆலைகள் 20 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்யும் வகையில் அதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31-ஆம் தேதி வரையில் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் தெரிவி க்கப்பட்டுள்ளது.
 சர்க்கரை ஏற்றுமதிக்கான காலக்கெடு வரும் செப்டம்பருடன் முடிவடையவிருந்த நிலையில் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசு புள்ளிவிவரங்களின்படி, இதுவரையில் 5 லட்சம் டன் சர்க்கரை மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com