ஜிஎஸ்டி ஆண்டுக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆண்டுக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு அடுத்தாண்டு மார்ச் 31 வரையில் நீடித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆண்டுக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு அடுத்தாண்டு மார்ச் 31 வரையில் நீடித்துள்ளது.
 ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் தங்களது விற்பனை, கொள்முதல் குறித்த முழு விவரங்களையும், தாங்கள் பெற்ற உள்ளீட்டு வரி பலன்களையும் ஆண்டுக்கு ஒரு முறை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் 2017-18 ஆண்டுக்கான விவரங்களை தாக்கல் செய்ய கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதற்கான கடைசி தேதி நடப்பாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நிதி அமைச்சகம் நீடித்துள்ளது.
 நேரடி வரிகள் வாரியம் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வர்த்தகர்கள் ஜிஎஸ்டிஆர்-9, ஜிஎஸ்டிஆர்-9ஏ மற்றும் ஜிஎஸ்டிஆர்-9சி படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரும் 2019 மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான படிவங்கள் அனைத்தும் ஜிஎஸ்டி-யின் பொது வலைதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com