ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் மும்மடங்கு உயர்ந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் கே தாசரி கூறியுள்ளதாவது:
நிறுவனம் மூன்றாம் காலாண்டில் சிறப்பான செயல்பாட்டை பதிவு செய்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கால அளவில் மொத்த வருவாயாக ரூ.7,151.12 கோடி ஈட்டப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.4,854.03 கோடியாக இருந்தது. வருவாய் கணிசமாக உயர்ந்ததையடுத்து நிகர லாபம் ரூ.161.71 கோடியிலிருந்து மும்மடங்கு அதிகரித்து ரூ.449.7 கோடியாகி உள்ளது என்றார் அவர்.