விப்ரோ: நவீன வகை மின் விளக்குகள் அறிமுகம்

இணையதளம் மூலம் செயல்படும் நவீன தொழில்நுட்பத்திலான மின் விளக்குகளை விப்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 
விப்ரோ: நவீன வகை மின் விளக்குகள் அறிமுகம்

இணையதளம் மூலம் செயல்படும் நவீன தொழில்நுட்பத்திலான மின் விளக்குகளை விப்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 
இது குறித்து விப்ரோ நுகர்வோர் பாதுகாப்பு, ஒளியமைப்பு வணிகப் பிரிவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மகரந்த் சைனிஸ் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: 'இன்டர்நெட் ஆஃப் லைட்டிங்' ('ஐஓஎல்') என்ற புதிய தொழில்நுட்பத்தை விப்ரோ லைட்டிங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்திலான விளக்குகளை அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், தெருக்கள் ஆகியவற்றில் பொருத்தலாம். 
மடிக் கணினி மூலம் இணையத்தின் உதவியோடு விளக்குகள் எரிவதைக் கட்டுப்படுத்த முடியும். இதற்கு 'வை-ஃபை' அல்லது வயர் மூலம் செயல்படும் இணைய வசதி தேவையில்லை. கண்ணுக்கு புலப்படும் ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்பமான லை-ஃபை (கண்-ஊண்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் வைஃபை-ஐ காட்டிலும் 100 மடங்கு வேகமாக செயல்படக் கூடியது. வைஃபையில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசைகளை விடவும், லைஃபை 10, 000 மடங்குகள் திறன்கொண்டது. இதன் மூலம் விநாடிக்கு 1 ஜிகாபைட் வேகத்தில் இணைய பயன்பாட்டைப் பெற முடியும்.
இந்த தொழில்நுட்பத்திலான விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை 50 சதவீதத்துக்கும் மேல் சேமிக்க முடியும்; எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் விளக்குகளை இயக்கலாம்; புத்தகம் படிக்க, வேலை செய்ய, உறங்குவதற்கு என பல விஷயங்களுக்கு நமது விருப்பத்துக்கேற்றவாறு ஒளியின் அளவைக் குறைத்துக் கொள்ளவோ கூட்டிக் கொள்ளவோ இயலும். இந்த விளக்குகள் 50,000 மணி நேரம் வரை எரியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com