இந்திய அஞ்சல் பேமென்ட் வங்கிச் சேவை: நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் தொடக்கம்

இந்திய அஞ்சல் பேமென்ட் வங்கிச் சேவை வரும் ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் பேமென்ட் வங்கிச் சேவை: நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் தொடக்கம்

இந்திய அஞ்சல் பேமென்ட் வங்கிச் சேவை வரும் ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அஞ்சலகத் துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்திய அஞ்சல் பேமென்ட் வங்கிச் சேவை ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் உள்ள 1.55 லட்சம் அஞ்சல் அலுவலக கிளைகளை வங்கி சேவை கிடைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 
650 பேமென்ட் வங்கி கிளைகள் அதற்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்கும். பேமென்ட் பேங்க் விரிவாக்க திட்டம் தொடர்ந்து சீரிய முறையில் முன்னேற்றம் கண்டு வருகிறது. 
இது முடிவுக்கு வரும் நிலையில், ஊரக மற்றும் நகர்புறப் பகுதிகள் இரண்டிலும் நிதி சேவை அளிக்கும் மிகப்பெரிய அமைப்பாக இந்திய அஞ்சலக பேமண்ட்ஸ் வங்கி உருவெடுக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி, அஞ்சல் துறை உள்ளிட்ட 11 நிறுவனங்கள் பேமென்ட் வங்கிகளை அமைத்துக் கொள்ள கொள்கை அளவில் ஒப்புதலளித்தது.
பேமென்ட் வங்கிகள் பாரம்பரிய வங்கிகளைப் போல், வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க முடியாது. ஆனால், ரூ.1 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளைப் பெறுவதுடன், பிற வங்கிகளைப் போல அனைத்து சேவைகளையும் வழங்க முடியும். 
பேடிஎம், ஏர்டெல்லுக்குப் பிறகு பேமென்ட் வங்கிச் சேவையை முழு அளவில் வழங்கும் மூன்றாவது நிறுவனமாக இந்திய அஞ்சல் பேமென்ட் வங்கி உருவெடுக்கவுள்ளது. இதற்கு, அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு மூலம் ஏற்கெனவே, 17 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017- ஜனவரியில் ராய்ப்பூர், மற்றும் ராஞ்சி நகரங்களில் இந்திய அஞ்சல் பேமண்ட்ஸ் வங்கி சோதனை அடிப்படையில் இந்த சேவையை ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com