இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான எதிர்காலம் குறித்த நிச்சயத்தன்மை நிலவி வரும் நிலையிலும், அந்தப் பிரிவு வாகனத் தயாரிப்புகாக ரூ.900 கோடியை கூடுதலாக முதலீடு செய்ய மஹிந்திரா குழுமம் முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே இந்தப் பிரிவுக்காக ரூ.600 கோடி முதலீடு செய்துள்ள மஹிந்திரா, மாதத்துக்கு 5,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருந்தது.
தற்போது அடுத்த நான்கு ஆண்டுகளில் கூடுதலாக ரூ.900 கோடி முதலீடு செய்யப்படுவதன் மூலம், மஹிந்திரா எலக்ட்ரிக் நிறுவனத்தின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.