அம்புஜா சிமெண்ட் லாபம் ரூ.478 கோடியாக அதிகரிப்பு

அம்புஜா சிமெண்ட் மூன்றாம் காலாண்டில் ரூ.478 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
அம்புஜா சிமெண்ட் லாபம் ரூ.478 கோடியாக அதிகரிப்பு

அம்புஜா சிமெண்ட் மூன்றாம் காலாண்டில் ரூ.478 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் சிமெண்ட் விற்பனை கணிசமான அளவில் உயர்ந்தது. அத்துடன், கிளிங்கர் உற்பத்தியும் சூடுபிடித்தது.
கடந்த நிதி ஆண்டில் 50 லட்சம் டன்னாக காணப்பட்ட சிமெண்ட் விற்பனை நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 17.4 சதவீதம் அதிகரித்து 58.70 லட்சம் டன்னை எட்டியது.
இதன் காரணமாக, நிறுவனத்தின் வருவாய் ரூ.5,645.84 கோடியிலிருந்து 10.96 சதவீதம் உயர்ந்து ரூ.6,264.81 கோடியாகியது. அதேபோன்று, மொத்த செலவினமும் ரூ.5,309.59 கோடியிலிருந்து 4.36 சதவீதம் அதிகரித்து ரூ.5,541.24 கோடியாக இருந்தது.
நிகர லாபம் ரூ.270.08 கோடியிலிருந்து 77.12 சதவீதம் உயர்ந்து ரூ.478 கோடியைத் தொட்டுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு 100 சதவீத ஈவுத்தொகை அதாவது பங்கு ஒன்றுக்கு ரூ.2 வழங்க நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுபரிந்துரைத்துள்ளது. இடைக்கால ஈவுத்தொகை ரூ.1.60-ஐயும் சேர்த்தால் சென்ற ஆண்டுக்கு பங்கு ஒன்றுக்கு மொத்தம் ரூ.3.60 (180 சதவீதம்) ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது என அம்புஜா சிமெண்ட் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com