பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் என்பது எப்போதும் இருக்கும். நல்ல வலுவான அடிப்படைகளைக் கொண்ட நிறுவனப் பங்குகளை நீண்ட கால அடிப்படையில் வாங்கிப் போட்டால் நல்ல லாபம் பெற முடியும் என்கின்றனர் நிதி ஆலோசகர்கள்.
அதே சமயம், பங்குச் சந்தையில் தின வர்த்தகத்தில் ஈடுபடுவோர்களில் எத்தனை பேர் நல்ல லாபம் சம்பாதித்திருப்பார்கள் என்பது சந்தேகமே என்கின்றனர் வல்லுநர்கள்.
எனவே, தின வர்த்தகத்தில் ஈடுபடும் போது இழப்பு நிறுத்த (ஸ்டாப் லாஸ்) அளவையும் மனதில் வைத்து வர்த்தகம் செய்ய வேண்டும். அப்போதுதான் பெரும் நஷ்டத்தை தவிர்த்து, அடுத்து வரும் நாள்களில் சந்தையில் நிலைத்து நிற்க முடியும்.
மேலும், சந்தையின் போக்குக்குத் தக்கவாறு, ஏற்றம் பெறும் போது பங்குகளை வாங்கி விற்கவும், இறக்கம் காணும்போது பங்குகளை விற்றுவிட்டு வாங்குவதையும் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, புத்தாண்டில் பங்குச் சந்தையில் தினவர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் இவற்றைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.