மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் 6 நாடுகளில் 11 கிளைகள் ஒரே நாளில் திறப்பு

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம், 6 நாடுகளில் 11 கிளைகளை வெள்ளிக்கிழமை திறந்தது.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம், 6 நாடுகளில் 11 கிளைகளை வெள்ளிக்கிழமை திறந்தது.
இதுகுறித்து மலபார் குழுமத்தின் தலைவர் எம்பி அகமது கூறியதாவது:
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் 11 கிளைகள் சிங்கப்பூர், மலேசியா, கத்தார் உள்ளிட்ட ஆறு நாடுகளில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. இந்திய ஜுவல்லரி நிறுவனமொன்று இத்தகைய சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் முறை. 
இப்புதிய கிளைகள் திறப்பையடுத்து, நிறுவனத்துக்குச் சொந்தமான மொத்த கிளைகளின் எண்ணிக்கை 208-ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2017-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 27 கிளைகள் திறக்கப்பட்டன. 
ஆபரணங்கள் விற்பனையில் உலக அளவில் முன்னிலை வகிக்க பல்வேறு விரிவாக்க திட்டங்களை மலபார் குழுமம் விரைந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, நடப்பு ஆண்டில் அமெரிக்கா, இலங்கை, புருணே, வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகளில் மேலும் 50 புதிய கிளைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆபரண உற்பத்தி ஆலைகள் அமைக்கும் திட்டமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com