புதிய உச்சத்தில் மும்பை பங்கு சந்தை முடிவு

இந்திய பங்குச்சந்தைகள் இன்று புதிய உச்சத்தை தொட்டது. சென்செக்ஸ், நிஃப்டி என இரண்டு சந்தைகளும் எழுச்சி அடைந்து வருவதால் முதலீட்டார்கள் மிகவும் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
புதிய உச்சத்தில் மும்பை பங்கு சந்தை முடிவு

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று புதிய உச்சத்தை தொட்டது. சென்செக்ஸ், நிஃப்டி என இரண்டு சந்தைகளும் எழுச்சி அடைந்து வருவதால் முதலீட்டார்கள் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 178 புள்ளிகள் உயர்ந்து 35,260.29 என்ற புதிய உச்சத்தை அடைந்து.

இதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 25 புள்ளிகள் அதிகரித்து 10,817 என்ற நிலையில் வர்த்தகம் நடைபெற்றது. 

கார்ப்பரேட் நிறுவனங்களின் சிறப்பான மூன்றாவது காலாண்டு நிதிநிலை அறிக்கையும், குறிப்பாக, வங்கி, தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகள் விலை சற்று உயர்வை சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com