ஹுண்டாய் மோட்டார் இந்தியா, கிராண்ட் ஐ10 விலையை 3 சதவீதம் வரை உயர்த்தவுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மூலப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக கிராண்ட் ஐ10 விலை 3 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளது. இந்த புதிய விலை உயர்வானது வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும். அதேசமயம், இதர மாடல்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தற்போது கிராண்ட் ஐ10 காரின் விலை ரூ.4.74 லட்சம் முதல் ரூ.7.51 லட்சம் வரையில் உள்ளது.
நடப்பாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி புதிய வகை காரை ஹுண்டாய் அறிமுகப்படுத்தவுள்ள நிலையில், கிராண்ட் ஐ10-இன் விலை உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஹுண்டாய் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய மாடல் மீண்டும் சான்ட்ரோ பிராண்டாக இருக்கலாம் என்ற கருத்து பரவலாக உள்ளது.