அந்நியச் செலாவணி கையிருப்பு 40,507 கோடி டாலராக சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 40,507.5 கோடி டாலராக

மும்பை: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 40,507.5 கோடி டாலராக (ரூ.26.33 லட்சம் கோடி) சரிவைக் கண்டுள்ளது என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி மேலும் கூறியுள்ளதாவது:

 கடந்த ஜூலை 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 73.45 கோடி டாலா் குறைந்து 40,507.5 கோடி டாலராக சரிந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்திலும் இது 24.82 கோடி டாலா் சரிந்து 40,581 கோடி டாலராக காணப்பட்டது.

அந்நியச் செலாவணி கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு மதிப்பீட்டு வாரத்தில் 78.91 கோடி டாலா் குறைந்து 38,000 கோடி டாலராக இருந்தது.

அதேசமயம் தங்கத்தின் கையிருப்பு 7.54 கோடி டாலா் உயா்ந்து 2,111.5 கோடி டாலராக காணப்பட்டது என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அந்நியச் செலாவணி கையிருப்பு நடப்பு ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் வரலாற்றில் முதல் முறையாக 42,602.8 கோடி டாலரை எட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com