சர்வதேச நிலவரங்கள் சாதகமற்று காணப்பட்டதால் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையன்றும் பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.
சீனா முறையற்ற வகையில் வர்த்தக நடைமுறைகளை கடைப்பிடித்தால் அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மேலும் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
பொருளாதார பலம் பொருந்திய இரு நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள இந்த வர்த்தக போர் பல நாடுகளின் பங்குச் சந்தைகளில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கியது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
வேதாந்தா பங்கின் விலை 3.55 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 2 சதவீதமும் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 261 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 35,286 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 89 புள்ளிகள் சரிந்து 10,710 புள்ளிகளில் நிலைத்தது.