டாடா மோட்டார்ஸின் புதிய அறிமுகம் 'செஸ்ட் பிரிமியோ'

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அடுத்தப் பதிப்பாக 'செஸ்ட் பிரிமியோ' என்ற புதிய ரக காரை சென்னையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.
செஸ்ட் ப்ரீமியோ அறிமுக நிகழ்ச்சியில் (வலமிருந்து) டாடா மோட்டார்ஸ் பயணியர் வர்த்தக வாகனப் பிரிவு (விற்பனை) துணைத் தலைவர் எஸ்.என்.பர்மன். உடன் டாடா கான்காட் பிரிவின் முதன்மை செயல் அதிகாரி ரிஷி கோயல்.
செஸ்ட் ப்ரீமியோ அறிமுக நிகழ்ச்சியில் (வலமிருந்து) டாடா மோட்டார்ஸ் பயணியர் வர்த்தக வாகனப் பிரிவு (விற்பனை) துணைத் தலைவர் எஸ்.என்.பர்மன். உடன் டாடா கான்காட் பிரிவின் முதன்மை செயல் அதிகாரி ரிஷி கோயல்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அடுத்தப் பதிப்பாக 'செஸ்ட் பிரிமியோ' என்ற புதிய ரக காரை சென்னையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.
இந்த புதிய காரை டாடா மோட்டார்ஸ் விற்பனைப் பிரிவின் துணைத் தலைவர் எஸ்.என்.பர்மன் அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து புதிய காரின் சிறப்பம்சங்கள் குறித்து நிருபர்களிடம் அவர் கூறியது: 
வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரிமியம் தன்மையை வழங்கும் வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 13 புதிய வசதிகளைக் கொண்ட சிறப்புப் பதிப்பாக 'செஸ்ட் பிரிமியோ' காரை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கெனவே நாடு முழுவதும் 85,000-க்கும் மேற்பட்ட 'செஸ்ட்' கார்கள் விற்பனையாகியுள்ளதைக் கொண்டாடும் வகையில் இந்த செஸ்ட் பிரிமியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டீசலில் இயங்கும் இதன் விலை ரூ.7.46 லட்சம். நாடு முழுவதும் உள்ள அனைத்து டாடா மோட்டார்ஸ் விற்பனை மையங்களிலும் இந்த கார் விற்பனை செய்யப்படவுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் துடிப்பான தோற்றத்துடன் இந்த காரை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த கார் இளமையான, உத்வேகம் கொண்ட வாடிக்கையாளர்களை மிகவும் கவரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com