மத்திய அரசுக்கு சொந்தமான ஹெச்எம்டி நிறுவனம் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.4.35 கோடி நிகர லாபம் ஈட்டியது. செயல்பாடுகளிலிருந்து கிடைக்கும் வருவாய் அதிகரித்ததையடுத்து அந்த நிறுவனம் மீண்டும் லாப பாதைக்கு திரும்பியுள்ளது.
கடந்த 2016-17 நிதி ஆண்டின் இதே கால அளவில் அந்நிறுவனம் ரூ.68.4 கோடி நிகர இழப்பை சந்தித்திருந்தது.
வருவாய் ரூ.5.59 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.8.14 கோடியானது. அதேசமயம் செலவினம் ரூ.5.32 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.7.59 கோடியானது.
கடந்த 2016-17-இல் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு எடுத்த முடிவின் அடிப்படையில் ஹெச்எம்டி டிராக்டர் வர்த்தகம் கைவிடப்பட்டது
குறிப்பிடத்தக்கது.