தொலைத் தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் வோடபோன் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் 10 லட்சம் வாடிக்கையாளர்கள் மாறியுள்ளனர்.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஏர்செல் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் அதன் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் வோடபோனுக்கு மாற அதிக அளவில் விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது வரையில் 10 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் வோடபோன் நிறுவனத்துக்கு மாறியுள்ளனர்.
ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில் வாரத்தின் ஏழு நாள்களும் சில்லறை விற்பனை மையங்களில் தேவையான ஏற்பாடுகளை வோடபோன் செய்து வருகிறது. புதிய வாடிக்கையாளர்களின் இணைப்புக்கு ஏற்ப தொலைத் தொடர்பு வசதிகளை தங்குதடையின்றி வழங்கிட நெட்வொர்க் கட்டமைப்புகளில் தேவையான மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளதாக வோடபோன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.