ஹூண்டாய் மேட்டார் இந்தியா நிறுவனத்தின் மிகப் பிரபல ரகமாக இருந்த சான்ட்ரோ கார்களை, மீண்டும் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த மாத இறுதியில் அறிமுகமாகவிருக்கும் புதிய சான்ட்ரோ கார்கள், முற்றிலும் புதிய பொலிவுடன் விற்பனை செய்யப்படவிருப்பதாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.1 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின்களுடன் அறிமுகமாகவிருக்கும் இந்தக் கார்களில், தானியங்கி இயக்க வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் விரும்பினால், தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி எரிபொருளைப் பயன்படுத்தும் வசதியுடன் இந்தக் கார்கள் கிடைக்கும்.
மக்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றிருந்த ஹூண்டாயின் சான்ட்ரோ கார்களின் விற்பனை, கடந்த 2014-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.