பாகுபலி ரூ 1500 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எஸ்.எஸ்.ராஜமெளலி இயத்தில், நடிகர் பிரபாஸ், ரானா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியான திரைப்படம் பாகுபலி 2. வெளியான நாள் முதல் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன.
சமீபத்தில் ரூ 1000 கோடி வசூலை தொட்ட பாகுபலி 2 தற்போது மேலும் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளது. பாகுபலி 2 வெளியான மூன்று வாரங்களில் ரூ 1500 கோடி வசூலை கடந்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படமானது இந்தியாவில் 1225 கோடியும், வெளிநாடுகளில் 275 கோடியும் வசூலாக ஈட்டியுள்ளது என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவிலேயே இப்படம் 2000 கோடியைத் தொட வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.
இதுவரை எந்த ஒரு இந்தியத் திரைப்படமும் படைத்திராத வசூல் சாதனையை பாகுபலி 2 நிகழ்த்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.