சர்வதேச திரைப்பட விழாவில் அதிக அளவில் பெண் இயக்குநர்களின் படங்கள்

கேரள சர்வதேச திரைப்பட விழாவில் முதல் முறையாக பெண் இயக்குநர்களின் திரைப்படங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன.

கேரள சர்வதேச திரைப்பட விழாவில் முதல் முறையாக பெண் இயக்குநர்களின் திரைப்படங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன.
கேரள சர்வதேச திரைப்பட விழா, கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில், வரும் 9-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில், அந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண் இயக்குநர் விது வின்சென்ட் இயக்கியுள்ள "மேன்ஹோல்' என்ற திரைப்படமும், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த நாடக நடிகை சந்த்வானா பர்டோலாய் இயக்கி, தயாரித்துள்ள "மிட்நைட் கெடகி' என்ற திரைப்படமும், துருக்கியைச் சேர்ந்த இயக்குநரான யெஸிம் உஸ்தாவ்க்ளு இயக்கியுள்ள "கிளேயர் அப்ஸ்கியூர்' என்ற திரைப்படமும் இடம்பெறவுள்ளன.
இதில், "மேன்ஹோல்' திரைப்படம், ரவிக்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர், தனது மூதாதையர்களைப் பற்றி எழுதியிருக்கும் கதையைத் தழுவி விது வின்சென்ட் இயக்கியிருக்கும் திரைப்படமாகும்.
இந்தத் திரைப்படம், மலக் கழிவு குழிக்குள் இறங்கி கழிவுகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் பிரச்னைகளை விவாதிக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் மூலம், கேரள சர்வதேசத் திரைப்பட விழாவில் நடைபெறும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் முதல் கேரள பெண் இயக்குநர் என்ற பெருமையை விது வின்சென்ட் பெற்றுள்ளார்.
இதுதவிர, அனன்யா காசரவல்லி, சுமித்ரா பவே, லீனா யாதவ் போன்ற இந்தியப் பெண் இயக்குர்களின் திரைப்படங்களும் திரைப்பட விழாவில் இடம்பெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com