விழாக்களுக்கு வராத நடிகைகளுக்கு விவேக் புதிய யோசனை!

இந்த விழாவுக்கு படத்தின் நாயகி நயன்தாரா வரவில்லை... 
விழாக்களுக்கு வராத நடிகைகளுக்கு விவேக் புதிய யோசனை!

தமிழ் சினிமா விழாக்களில் பிரபல நடிகைகளைக் காண்பது அரிதாகிவிட்டது. இதுகுறித்து பலரும் மேடைகளில் பேசியும் பிரச்னை தீரவில்லை. காஷ்மோரா செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து  பேசிய நடிகர் விவேக், வேடிக்கையாக ஆலோசனை ஒன்றையும் வழங்கினார்.

அவர் கூறியதாவது:

இந்த விழாவுக்கு படத்தின் நாயகி நயன்தாரா வரவில்லை. இப்போது இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு கதாநாயகிகள் வருவதில்லை. கேட்டால், செண்டிமெண்டாக ஒன்று சொல்கிறார்கள். விழாக்களுக்கு வந்தால் படம் சரியாக ஓடுவதில்லை. எனவே வரவில்லை என்கிறார்கள். அவர்கள் இதுபோல இன்னொன்றும் செய்யலாம். கடைசிக்கட்ட சம்பளத்தையும் தயாரிப்பாளர்களிடம் வாங்காமல் இருக்கலாம். அதையும் செண்டிமெண்டாக வைத்துக்கொள்ளலாம். தயாரிப்பாளர்களுக்கும் இதனால் லாபமாக இருக்கும் என்று வேடிக்கையாக ஆலோசனை வழங்கினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com