கணவர் மாதம் ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும்: நடிகை ரம்பா மேலும் ஒரு மனு தாக்கல்

மாதம்தோறும் ரூ.2.50 லட்சம் பராமரிப்புத் தொகையாக வழங்குவதற்கு, தனது கணவருக்கு உத்தரவிட கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா மனு தாக்கல் செய்துள்ளார்.
கணவர் மாதம் ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும்: நடிகை ரம்பா மேலும் ஒரு மனு தாக்கல்

மாதம்தோறும் ரூ.2.50 லட்சம் பராமரிப்புத் தொகையாக வழங்குவதற்கு, தனது கணவருக்கு உத்தரவிட கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா மனு தாக்கல் செய்துள்ளார்.

இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட கனடாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-இல் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக, 2012-ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், சென்னையில் வசித்துவரும் ரம்பா இந்து திருமணச் சட்டப்படி இணைந்து வாழ கணவருக்கு உத்தரவிடக்கோரி, சென்னை இரண்டாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் சனிக்கிழமை மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், மேலும் கூடுதலாக தாக்கல் செய்துள்ள மனுவில் ரம்பா கூறியிருப்பதாவது, "திருமணத்துக்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதில்லை. ஆகையால், எந்த வருமானம் இல்லை. மூத்த குழந்தை லான்யாவுக்கு சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம் கட்டணம் செலுத்துகிறேன். இளைய மகள் சாஷாவின் பராமரிப்பு, மருத்துவ செலவு அதிகமாக உள்ளது. கணவர் கனடாவில் மாதத்துக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 25 லட்சம் வருவாய் ஈட்டுகிறார். ஆகவே, மாதம்தோறும் ரூ.1.50 லட்சமும், இரு குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் என மொத்தம் ரூ.2.50 லட்சம் வழக்கு முடிவடையும் வரை இடைக்கால பாரமரிப்பு செலவுக்கு ( ஜீவனாம்சம்) வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனு ஏற்கெனவே இருந்த வழக்குடன் இணைத்து, டிசம்பர் 3-இல் விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com