எங்கு ஜெயித்தாலும் சென்னையில் ஜெயிப்பதுபோல் வராது: அல்லு அர்ஜூன் நெகிழ்ச்சி!

நான் தெலுங்கில் நடித்த எந்த ஒரு படத்தையும் தமிழில் டப் செய்யவில்லை...
எங்கு ஜெயித்தாலும் சென்னையில் ஜெயிப்பதுபோல் வராது: அல்லு அர்ஜூன் நெகிழ்ச்சி!

அல்லு அர்ஜூன் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமி இயக்கும் படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் அல்லு அர்ஜூன் பேசியதாவது:

நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் சென்னையில்தான். 2௦ வருடமாக இங்கேதான் இருந்தேன். எனக்குச் சொந்த ஊர் சென்னைதான். நான் மேடையில் தமிழில்தான் பேசவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். தப்பாகப் பேசினாலும் தமிழில்தான் பேசுவேன். நான் தெலுங்கில் நடித்த எந்த ஒரு படத்தையும் தமிழில் டப் செய்து ரீலீஸ் செய்யவில்லை. அதற்குக் காரணம் நான் பிறந்து வளர்ந்த சொந்த மண்ணில் நேரடித் தமிழ் படம் நடிக்கவேண்டும் என்பதனால்தான். எந்த மண்ணில் ஜெயித்தாலும் என்னுடைய சொந்த மண்ணில் ஜெயித்தது போல் வராது. நான் இதற்காகப் பல நாட்களாகக் காத்திருந்தேன் என்றார் அல்லு அர்ஜுன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com