2014-ல், மனோபாலா பிக்சர் ஹவுஸ் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்து வெளியானது சதுரங்கவேட்டை படம். வித்தியாசமான கதையால் ரசிகர்களிடம் அதிக கவனத்தைப் பெற்றது.
தென்மாவட்டங்களில் நடைபெறும் ஏமாற்று வேலைகளைப் பற்றி விவரித்தது அந்தப் படம். இப்போது இதன் அடுத்தப் பாகம் தயாராகவுள்ளது. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நகரவாழ் மக்களை தங்களது சிலந்தி வலையில் சிக்கவைத்து எவ்வாறெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்கிற கதையுடன் சதுரங்கவேட்டை 2 படம் தொடங்கப்பட்டுள்ளது. மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இப்படத்தையும் தயாரிக்கிறது. இதில் அரவிந்த்சாமியும் த்ரிஷாவும் நடிக்கவுள்ளார்கள்.
முதல்முறையாக அரவிந்த் சாமியும் த்ரிஷாவும் ஜோடி சேர்வதாலும் சதுரங்கவேட்டையின் இரண்டாம் பாகம் என்பதாலும் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.