பாகுபலி 2 படத்துக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

பாகுபலி 2 படத்துக்குத் தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்...
பாகுபலி 2 படத்துக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி. ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படம் ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கீரவாணி இசையில் உருவாகியுள்ள பாகுபலி 2 படத்தின் தமிழ்ப் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் பாகுபலி படத்துக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த ஏசிஇ மீடியா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதன் மனுவில், பாகுபலி 2 படத்தின் தமிழ்நாடு உரிமையைப் பெற்றிருக்கும் ஸ்ரீ கிரீன் புரொடக்சன் நிறுவனத்தின் சரவணன் எங்களிடம் ஒரு கோடியே 18 லட்சம் கடன் பெற்றார். படம் வெளியாகும் முன்பு 10 லட்சம் ரூபாய் சேர்த்துக்கொடுப்பதாக கடந்த ஆண்டு ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். பாகுபலி 2 படம் 28-ம் தேதி வெளியாகிற சூழலில் தமிழக விநியோக உரிமையை வேறொரு நபருக்கு அதிக விலைக்கு விற்பதாகத் தெரிகிறது. வாங்கிய கடனைத் திரும்பத் தராததாலும் பாகுபலி 2 படத்தின் விநியோக உரிமையை 3-வது நபருக்கு மாற்றியுள்ளதாலும் இதனைக் கருத்தில் கொண்டு படத்தை வெளியிடவும் விநியோக உரிமையை 3-வது நபர்க்கு மாற்றவும் தடை விதிக்கவேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.  

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. பாகுபலி 2 படத்துக்குத் தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 18-ம் தேதி ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com