சென்னை: ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் புதிய படமான வனமகனில் அவருக்கு வசனங்களே கிடையாது என்றும், வெறும் ஓசைகள் மற்றும் சைகைகள் மூலமே அவர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் புதிய படம் ‘வனமகன்’. இப்படத்தில் சாயிஷா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். இது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் ஐம்பதாவது படமாகும். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
காடு மற்றும் பழங்குடியினரை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி காட்டுவாசி இளைஞராக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு வசனங்களே கிடையாதாம். முழுக்க முழுக்க
வெறும் ஓசைகள் மற்றும் சைகைகள் மூலமே அவர் பேசி நடித்திருக்கிறாராம்.அவர் இதுவரை நடித்த படங்களில் இந்த படத்தின் கதாபாத்திரம் பேசும்படியாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த படமானது வரும் மே மாதத்தில் திரைக்கு வர உள்ளது.