திரையுலக நிர்வாகப் பணிகளில் மும்முரமாக இருந்தாலும் தொடர்ந்து நடிப்பிலும் ஈடுபட்டுவருகிறார் விஷால். ஒன்றினால் இன்னொன்று பாதிப்படைவதில்லை என்றுகூட சொல்லாம்.
சிவி குமார் தயாரிப்பில் நாளை நமதே என்கிற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஷால். இதில் அவர் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளார். பொன்.ராமின் உதவியாளர் வெங்கடேசன் இப்படத்தை இயக்குகிறார். இரு கதாநாயகிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார்.
துப்பறிவாளன், இரும்புத் திரை, கறுப்பு ராஜா வெள்ளை ராஜா ஆகிய படங்களில் விஷால் நடித்துவருகிறார். இதற்குப் பிறகு நாளை நமதே படத்தில் விஷால் நடிப்பார்.