பொதுமக்கள் கூடும் இடத்தில் சிவாஜி சிலையை வைக்க வேண்டும்

மக்கள் அதிகமாகக் கூடும் இடத்தில் நடிகர் சிவாஜி சிலையை நிறுவ வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பொதுமக்கள் கூடும் இடத்தில் சிவாஜி சிலையை வைக்க வேண்டும்

மக்கள் அதிகமாகக் கூடும் இடத்தில் நடிகர் சிவாஜி சிலையை நிறுவ வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் அமைந்திருந்த சிவாஜி சிலை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டு தற்போது அடையாறு சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "காமராஜர் சாலையிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசனின் சிலையை மீண்டும் கடற்கரையில் அமைந்துள்ள காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்திலோ நிறுவ வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 'இந்த விவகாரம் குறித்து தமிழக அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்படும்.
சிவாஜி சிலை விவகாரம் தொடர்பாக குரல் கொடுத்த சமூக அமைப்புகளுக்கும், பெப்சி அமைப்புக்கும், இயக்குநர்கள் சங்கத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ' என குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com