சுந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன் நடிப்பில் சுசீந்திரன் இயக்கும் படம் - அறம் செய்து பழகு. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு, நெஞ்சில் துணிவிருந்தால் என்று மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுசீந்திரன் விளக்கம் அளித்ததாவது: மதுரையை சேர்ந்த ஒரு மருத்துவமனை தன்னுடைய சமூகசேவை தொடர்புடைய பணிகளுக்கு அறம் செய்து பழகு என்கிற தலைப்பைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அவர்களிடம் பேசினோம். ஆனால் அந்தத் தலைப்பைப் பயன்படுத்துவதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். எனவே நெஞ்சில் துணிவிருந்தால் என்று தலைப்பை மாற்றியுள்ளோம். கதைக்கும் இதுதான் சரியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
இதுதவிர புதுமுகங்களைக் கொண்டு நகரம் சார்ந்த ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் சுசீந்திரன்.