பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் கேரளாவிலுள்ள கொச்சிக்கு இன்று வருகை தந்துள்ளார். அங்குள்ள மொபைல் நிறுவனத்தின் தொடக்க விழாவுக்கு அவர் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சன்னி லியோனை நேரில் பார்க்க கொச்சி ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்துள்ளார்கள். கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறைக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது.
இதுகுறித்து ட்விட்டரில் கூறிய சன்னி லியோன், என் கார், மக்கள் கடலில் மாட்டிக்கொண்டுவிட்டது. சொல்ல வார்த்தைகள் இல்லை. கொச்சி மக்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. அவர்கள் வெளிப்படுத்திய அன்பில் நெகிழ்ந்து போயிருக்கிறேன். இதை மறக்கவே மாட்டேன். கேரளாவுக்கு நன்றி என்று கூறியுள்ளார். இதோடு மக்கள் கூட்டத்தைப் புகைப்படமாகவும் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.
சன்னி லியோன் நடிப்பில் Tera Intezaar என்றொரு படம் வெளிவரவுள்ளது. மேலும் Baadshaho, Bhoomi ஆகிய படங்களில் பாடல் காட்சிகளில் அவர் நடித்துள்ளார்.