மாரி 2 படத்தின் வேலைகள் ஆரம்பித்துவிட்டன. அக்டோபரில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.
இதுகுறித்து தனுஷ் ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது: முதல் பாகத்தை விடவும் உள்ளடக்கம் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் இதில் அதிகமாக இருக்கும். கதாநாயகியைத் தவிர இதர கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் மாரி 2-விலும் தொடர்வார்கள் என்றார்.
மாரி படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், படத்தொகுப்பாளர் ஜிகே பிரசன்னா, நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மற்றும் இதர குணச்சித்திர நடிகர்கள் மாரி 2-விலும் தொடர்கிறார்கள். முதல் பாகத்தில் காஜல் அகர்வால் நடித்தார். இதில் புதிய கதாநாயகி நடிக்கவுள்ளார். இன்னமும் வில்லன், இசையமைப்பாளர் போன்றோர் ஒப்பந்தமாகவில்லை என்று கூறப்படுகிறது. அக்டோபரில் படப்பிடிப்பு ஆரம்பிப்பதால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.