ரஜினியை இயக்குவது தொடர்பாக பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஆங்கில நாளிழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
சில வருடங்களுக்கு முன்பு ரஜினி சாரிடம் ஒரு கதை சொன்னேன். அவருக்கும் அந்தக் கதை பிடித்தது. நான் ஒரு தீவிரமான ரஜினி ரசிகன். ஆனால் அதற்கு மேல் தொடரமுடியாமல் படம் ஆரம்பிக்கமுடியாமல் போய்விட்டது. ரஜினிக்காக ஒரு கதை தயாரிப்பது எனக்குக் கஷ்டமான விஷயம் இல்லை. என்னால் ஒரு மாதத்துக்குள் ரஜினிக்கேற்ற ஒரு கதையைத் தயார் செய்யமுடியும். அவருக்காக ஒரு கதையும் வைத்துள்ளேன்.
சந்தர்ப்பம் சரியாக அமையும்போது ரஜினியுடன் இணைந்து நிச்சயம் ஒரு படம் பண்ணுவேன் என்று கூறியுள்ளார்.
மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பைடர் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள படத்தை என்.வி.பிரசாத் மற்றும் தாகூர் மது தயாரித்துள்ளார்கள். செப்டம்பர் 29 அதாவது ஆயுத பூஜை அன்று படம் வெளிவருகிறது. இதற்கு அடுத்தகாக நடிகர் விஜய்யை மூன்றாவது முறையாக இயக்கவுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ்.