தென்னிந்திய திரைப்பட சண்டை கலைஞர்களின் சங்க பொன்விழாவையொட்டி வரும் 26-ஆம் தேதி சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: ஆகஸ்ட் 26-ஆம் தேதி தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை சண்டை இயக்குநர்கள் மற்றும் சண்டைக் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா சென்னையில் பிரமாண்டமாக கொண்டப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் திரைத் துறையினர் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில், அன்றைய தினம் சினிமா படப்பிடிப்பை ரத்து செய்யுமாறு சண்டைக் கலைஞர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்துக்குக் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் ஆகஸ்ட் 26-ம் தேதி அனைத்து படப் பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.