சமீபத்தில் ட்விட்டர் தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார் இயக்குநர் செல்வராகவன். அப்போது அவரிடம், எது உங்கள் கனவுப்படம் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த செல்வராகவன், சூர்யா நடிப்பில் இயக்கும் அடுத்தப் படம் எனப் பதில் அளித்தார். புதுப்பேட்டைக்குப் பிறகு இந்தப் படத்தின் திரைக்கதையை மிகவும் ரசித்து செய்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்கிற படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. அதன்பிறகு செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.