செம்மஞ்சேரி அருகே நேர்ந்த கார் விபத்தில் இயக்குநர் கெளதம் மேனன் சிறு காயத்துடன் தப்பியுள்ளார்.
மாமல்லபுரத்திலிருந்து தனது காரில் சென்னைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார் இயக்குநர் கெளதம் மேனன். இந்நிலையில் செம்மஞ்சேரி அருகே டிப்பர் லாரி மீது கெளதம் மேனனின் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கெளதம் மேனன் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். ஆனால் கார் நொறுங்கி பலத்த சேதத்துக்கு ஆளாகியுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை செய்துவருகிறார்கள்.