இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா, தமிழ் எழுத்துகள் குறித்த வரலாற்று ஆவணப் படத்தைத் தயாரித்து வருகிறார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:
இன்னைக்கு தமிழ் மொழியை இந்த தமிழ் எழுத்துகளை வச்சி எழுதிட்டிருக்கோம் ஆனால் தமிழ் மொழிக்கான இந்த எழுத்துகள் எங்கிருந்து உருவாகியிருக்கும்? தமிழி- தமிழ் எழுத்துகளின் வரலாற்றின் ஊடே தமிழ் மொழியின் தொன்மையையும் தமிழர்களின் திண்மையையும் வெளிக்கொணர முயலும் ஓர் புதிய முயற்சி என்று எழுதியுள்ளார்.
தமிழ் எழுத்துகளின் பரிணாம வளர்ச்சி குறித்த தமிழி என்கிற இந்த ஆவணப் படம் இணையத்தில் தொடராக வெளிவரவுள்ளது. இந்த வரலாற்று ஆவணப்படத்தை ஹிப்ஹாப் தமிழா தயாரித்து வருகிறார். இந்த ஆவணப் படம் 2018 ஏப்ரலில் வெளியிடப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.