ஃபெப்ஸி தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு

ஃபெப்ஸி தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு

ஃபெப்ஸி என அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஃபெப்ஸி என அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

23 திரை அமைப்புகளின் ஒருங்கிணைந்த தலைமையகமாக ஃபெப்ஸி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த முறை பதவி வகித்து வந்த சிவா தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் சென்னையில் உள்ள ஃபெப்ஸி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
23 சங்கங்களைச் சேர்ந்த தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் மட்டுமே வாக்களித்து இந்த நிர்வாகத்தை அமைப்பதால், அந்த சங்கங்களை சேர்ந்த 69 பேர் வாக்களித்தனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியனின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த தேர்தலில், வாக்கு எண்ணிக்கை பிற்பகலில் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணி தேர்வு செய்யப்பட்டார். செயலாளர் பதவிக்கு சண்முகம் தேர்வானார். பொருளாளராக சுவாமிநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் இதில் தேர்வு செய்யப்பட்டனர். வியாழக்கிழமை மாலை சென்னையில் நடைபெறும் விழாவில் பதவியேற்பு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com