இது யாரோட இந்தியா என்கிற தலைப்பில் வெளியான கவிதைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
இது யாரோட இந்தியா என்ற தலைப்பில் என் பெயரிட்டு சில வரிகள் சமூக ஊடகங்களில் உலா வருவதாக என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அதற்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதை என்மீது அன்புகொண்ட அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.