ஹைட்ரோ கார்பன் எனும் பெயரில் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு கடந்த 15-ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, நெடுவாசல் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி புதுக்கோட்டைப் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இத்திட்டம் குறித்து நடிகர் கார்த்தி ட்விட்டரில் கூறியதாவது: ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. இதுதொடர்புடைய அதிகாரிகள் இதுகுறித்த உண்மையான தாக்கத்தை ஊடகம் வழியாக விளக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.