சென்னை: நடிகை த்ரிஷாவின் டிவிட்டர் பக்கம் அடையாளம் தெரியாத நபர்களால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீட்டா அமைப்பின் ஆதரவாளரான நடிகை த்ரிஷா ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தெரிவித்திருந்த கருத்துக்களும் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வந்தது. அவரது படத்தின் படப்பிடிப்பு கூட சிவகங்கை அருகே தடுத்து நிறுத்தபப்ட்டது.
இந்நிலையில் தனது டிவிட்டர் கணக்கை அடையாளம் தெரியாத நபர் முடக்கி விட்டதாக த்ரிஷா தெரிவித்துளளார். தனது கணக்கை முடக்கி அடையாளம் தெரியாத நபர் பதிவிட்டதற்காகவும் த்ரிஷா தகவல் தெரிவித்துள்ளார்.