ஜல்லிக்கட்டு: இளைஞர்களைக் கவரும் நடிகர் ராகவா லாரன்ஸின் உதவிகள்!

போராட்டக் குழுவினருக்கு லாரன்ஸ் செய்துவரும் பல உதவிகள் இளைஞர்கள் மத்தியில்...
ஜல்லிக்கட்டு: இளைஞர்களைக் கவரும் நடிகர் ராகவா லாரன்ஸின் உதவிகள்!

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உதவிகள் செய்துவருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். போராட்டச் செலவாக எவ்வளவு ஆனாலும் நான் தருகிறேன். ஒரு கோடி ரூபாயாக இருந்தாலும் நான் தரத்தயார் என்று அவர் கூறியுள்ளார்.  

இந்நிலையில் மெரினா கடற்கரையில் இயற்கை உபாதைகளைக் கழிக்க தகுந்த வசதிகள் இல்லாததால் லாரன்ஸ் நடித்துவரும் சிவலிங்கா படத் தயாரிப்பாளரிடம் இதுதொடர்பாக அவர் கோரிக்கை வைத்தார். லாரன்ஸின் கோரிக்கையின்படி 5 கேரவன்கள் மெரினாவுக்கு வந்துள்ளன. 

இதுபோன்ற போராட்டக் குழுவினருக்கு லாரன்ஸ் செய்துவரும் பல உதவிகள் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com