போராட்டக்காரர்களை அரசியல் கட்சிகள் வழிநடத்த வேண்டும்: ஆர்ஜே பாலாஜி வேண்டுகோள்!

தலைமை என்று யாரும் இல்லாததால் போராட்டத்தில் வெவ்வேறு கோரிக்கைகள் உண்டாகின.
போராட்டக்காரர்களை அரசியல் கட்சிகள் வழிநடத்த வேண்டும்: ஆர்ஜே பாலாஜி வேண்டுகோள்!

இன்று மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இதனால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மெரினாவிலிருந்து வெளியேற மாணவர்களும் பொதுமக்களும் மறுத்தார்கள். இதனால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது.

இந்த விவகாரம் குறித்து நடிகர் ஆர்.ஜே. பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தலைமை என்று யாரும் இல்லாததால் போராட்டத்தில் வெவ்வேறு கோரிக்கைகள் உண்டாகின. போராட்டக் குழுவினர் அரசியல் கட்சிகளைத் தவிர்த்தாலும் என்னுடைய வேண்டுகோள் ஒன்று. இதுபோன்ற போராட்டத்தின்போது அரசியல் கட்சிகள் போராட்டக்காரர்களை வழிநடத்தவேண்டும்.

தலைமையில்லாததால் ஏற்பட்ட குழப்பம் தான் இது. 7 நாள்களாக மாணவர்கள் எல்லோரும் கண்ணியமாக நடந்துகொண்டார்கள். அவர்களின் பாதுகாப்பு முக்கியம். அவர்களுடைய பெற்றோர் பயப்படுவார்கள். எனவே எல்லோரையும் காவல்துறை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com