தொப்புளில் தேங்காயை வீசிய பிரபல தெலுங்கு இயக்குநரைக் கிண்டலடித்த நடிகை டாப்ஸி! (வீடியோ)

என் வயிற்றுப்பகுதியில் தேங்காய் மூடி விழுவதில் அப்படியென்ன காம உணர்வு உள்ளது...?
தொப்புளில் தேங்காயை வீசிய பிரபல தெலுங்கு இயக்குநரைக் கிண்டலடித்த நடிகை டாப்ஸி! (வீடியோ)

தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரைப் பொதுவெளியில் கிண்டலடிக்கும் தைரியம் எல்லா நடிகைகளுக்கும் வராது. ஆனால் நடிகை டாப்ஸி தெலுங்குத் திரையுலகில் தன்னை அறிமுகம் செய்த பிரபல தெலுங்கு இயக்குநர் ராகவேந்திர ராவை விமரிசனம் செய்கிற விதமாகக் கிண்டலாகப் பேசியுள்ளார். 

2010-ல் வெளியான Jhummandi Naadam என்கிற படம் மூலமாக தெலுங்குத் திரையுலகுக்கு அறிமுகமானார் நடிகை டாப்ஸி. அப்படத்தின் இயக்குநர் - ராகவேந்திர ராவ். இவர் படங்களில் கதாநாயகிகளின் வயிற்றுப்பகுதியில் பழங்களும் பூக்களும் வீசப்படுவது வழக்கம். பாடல்காட்சிகள் இதுபோன்ற காட்சிகளைக் காணமுடியும். இதே அனுபவம் தனக்கும் நேர்ந்ததாக டாப்ஸி கூறியுள்ளார்.

ஈஸ்ட் இந்தியா காமெடி என்கிற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை டாப்ஸி கூறியதாவது:

தென்னிந்தியாவில் நடிக்கும்போது என் முதல் படத்தில் பாடல் காட்சியைத்தான் முதலில் எடுத்தார்கள். வயிற்றுப்பகுதியை மையமாகக் கொண்டுதான் அந்தப் பாடல் இருந்தது. அதில் என்ன அப்படி ஆர்வம் என எனக்குப் புரியவில்லை. நான் இதற்குத் தயாராகவில்லை. என்னை அறிமுகப்படுத்தியவர், தொப்புள் பகுதியை மையமாகக் கொண்டு காட்சிகள் அமைப்பதில் பெயர் பெற்றவர். அவர் அறிமுகப்படுத்திய நடிகைகள் புகழ்பெற்றவர்கள். அது அவருக்கு 100-வது படம். எனக்கு ஐந்தாவது படம். கதாநாயகிகளின் வயிற்றுப்பகுதியைக் காண்பித்து அதில் பூக்களும் பழங்களை வீசிக் காட்சிகள் எடுத்தவர். எனக்கும் அதுபோல நடக்கும் என எதிர்பார்த்தேன். ஸ்ரீதேவி மற்றும் மற்ற நடிகைகளின் தொப்புளில் பூக்களும் பழங்களும் வீசப்படும் வீடியோக்களைப் பார்த்தேன். 

என்னுடைய காட்சியை எடுக்க ஆரம்பித்தார்கள். நான் அதை எதிர்பார்க்காததால் என்ன செய்யப்போகிறார் எனத் தெரியாது. 

என் வயிற்றுப்பகுதியில் தேங்காய் மூடியை வீசினார்கள். (டாப்ஸி மற்றும் அவரைக் கேள்வி கேட்ட மூவர், பார்வையாளர்கள் என அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.)

என் வயிற்றுப்பகுதியில் தேங்காய் மூடி விழுவதில் அப்படியென்ன காம உணர்வு உள்ளது என எனக்குப் புரியவில்லை?

(உடனே அந்நிகழ்ச்சியில் பாடலின் வீடியோ வெளியிடப்படுகிறது. பார்வையாளர்கள் கைத்தட்டி ரசித்து மகிழ்கிறார்கள்.)

டாப்ஸி: யாரும் இதை வைத்து என்னை மதிப்பிடவேண்டாம். 

(காண்பிக்கப்படும் பாடல் காட்சியில் தரையில் பல தேங்காய்கள் பரவிக்கிடக்கின்றன. அவற்றின் மீது படுத்துக்கொடுள்ளார் டாப்ஸி. அவர் வயிற்றுப்பகுதியில் தேங்காய்! பாடலின் முடிவில் தண்ணீருடன் உள்ள தேங்காயிலிருந்து தண்ணீரை வெளியே தள்ளியபடி எழுகிறார் டாப்ஸி. நிகழ்ச்சியில் இதைப் பார்த்து அனைவரும் தாங்க முடியாமல் சிரிக்கிறார்கள். டாப்ஸி உள்பட.)

டாப்ஸி: தேங்காய்த் தண்ணீரில் லேசாக நீல நிறம் படிந்திருக்கும். அது என் துணி, சாயம் போனதன் விளைவுதான்.  

பேட்டியாளர்: அற்புதம். நீங்கள் தேங்காய் மீது படுத்துள்ளீர்கள். வயிற்றுப்பகுதியில் தேங்காய். அதேபோல தேங்காயிலிருந்து எழுகிறீர்கள். இந்தப் பாடலில் தேங்காய் தான் நட்சத்திரம். 

மற்ற பேட்டியாளர்: பூக்களை வீசுவதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அதில் காமம் உள்ளது. ஸ்டாபெர்ரியைக் கூட வீசலாம். ஆனால் தேங்காய்? அது ஒரு வன்முறை. இந்தக் காட்சியைப் படமாக்கப்பட்டவுடன் நீங்கள் காவல்நிலையத்துக்குச் சென்றிருக்கவேண்டும்.

மற்றொரு பேட்டியாளர்: இது டாப்ஸியின் முதல் படம். எனவே அவர்கள் தேங்காய் உடைத்து அவரை அறிமுகம் செய்துள்ளார்கள்!

இந்த நிகழ்ச்சியின் வீடியோ வெளியானதையடுத்து தன்னை அறிமுகப்படுத்தியவரை டாப்ஸி அசிங்கப்படுத்தியுள்ளார் என்கிற விமரிசனங்களும் அவர் மீது எழுந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com