கவிஞர் வைரமுத்து தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
இயக்குநர் சீனு ராமசாமி ஃபேஸ்புக் பக்கத்தில் அவரை வாழ்த்தி எழுதிருப்பதாவது:
இன்று
நாட்டுக்கோழிகளும்
வெள்ளாட்டு கிடாய்களும்
அலறின..
ஜல்லிக்கட்டுகாளைகள்
திமிழ்களை நிமிர்த்தி
தழுவ அழைத்தன
கத்தரிப்பூ பூ பூத்திருந்தது நின் வருகையை
கெங்குவார் பட்டியில்...
கொண்டாட....
காமுக்காப்பட்டியின் தங்கை
வைகை வெள்ளம்
வந்து சேர்ந்த பள்ளம்
ஆண்டிப்பட்டி கணவா காத்தில் விஜய் சேதுபதி மீன் பிடித்து விளையாடிய நதியூராம்
மெட்டூரில் பிறந்தது வைரமுத்து என்ற கருப்பு காப்பியம்
தென்கிழக்கு சீமையின்
தமிழ் கோப்பியம்
ஏழு தேசிய விருதில்
இரண்டை எனக்குத்தந்த
வகுடெடுத்த வடுகப்பட்டி
கண்ணன்
கலைஞர் இவருக்கு
அண்ணன்
தமிழ் சினிமா பாட்டு உலகில் அதிக பட்ச சம்பளம் பெரும்
பாடலாசிரியர்
மதன் கார்க்கி வரை
களத்தில் நிற்கும்
நல்லாசிரியர்
அன்பு பிறந்த நாள்
வாழ்த்துக்கள் கவிஞரே.