ட்விட்டர் தளத்திலிருந்து நடிகை குஷ்பு வெளியேறியுள்ளார்.
வழக்கமாக அதிக ட்வீட்களை வெளியிடும் நடிகை குஷ்பு இன்று திடீரென இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் ட்விட்டரில் கூறியதாவது:
ட்விட்டரிலிருந்து சிலகாலம் விடைபெறுகிறேன். வாசிப்பில் கவனம் செலுத்தப் போகிறேன். விரைவில் திரும்ப வருவேன். என் மீது அன்பு செலுத்தியதற்கு நன்றி. ட்வீட் செய்ததில் மகிழ்ச்சி. இந்தத் தளத்தைப் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவுங்கள் என்று கூறியுள்ளார்.