மூன்று நாள்களில் படப்பிடிப்பு: தேனிலவுத் திட்டம் இல்லை: திருமணம் பற்றி சமந்தா

சமந்தா - நாக சைதன்யா ஆகிய இருவருக்கும் அக்டோபர் 6 அன்று கோவா-வில் திருமணம் நடைபெறவுள்ளது.
மூன்று நாள்களில் படப்பிடிப்பு: தேனிலவுத் திட்டம் இல்லை: திருமணம் பற்றி சமந்தா

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள். இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

இதையடுத்து சமந்தா - நாக சைதன்யா ஆகிய இருவருக்கும் அக்டோபர் 6 அன்று கோவா-வில் திருமணம் நடைபெறவுள்ளது.

இதுபற்றி ஆங்கிலப் பத்திரிகையில் அளித்த பேட்டியில் சமந்தா கூறியதாவது:

ஆமாம். அக்டோபர் 6-ம் தேதி எங்களுடைய திருமணம் நடைபெறவுள்ளது. திருமணம் ஹைதராபாத்தில் நடைபெறவில்லை. கோவா-வில் நடைபெறுகிறது. நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே அதில் கலந்துகொள்ளவுள்ளார்கள். இது நடுத்தரக் குடும்பத்தின் திருமணம். செய்திகளில் வெளியிட்டதுபோல விமரிசையாக எல்லாம் நடைபெறாது. 

அடுத்த மூன்று நாள்களில் இருவரும் மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பவேண்டும். எனவே இப்போதைக்கு தேனிலவு குறித்து எதுவும் திட்டமிடவில்லை என்று கூறியுள்ளார். 

சமந்தா தற்போது ஏழு படங்களில் நடித்துவருகிறார். பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் படத்தில் நடித்துமுடித்த பிறகு தாற்காலிகமாக நடிப்பிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com