சம்பள நிர்ணயம்: ஃபெப்சிக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் திடீர் நடவடிக்கை

திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களது விருப்பத்தின்படி தொழிலாளர்களை நியமித்து சம்பளத்தை வழங்கலாம் என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பள நிர்ணயம்: ஃபெப்சிக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் திடீர் நடவடிக்கை

திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களது விருப்பத்தின்படி தொழிலாளர்களை நியமித்து சம்பளத்தை வழங்கலாம் என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி:

ஃபெப்சியைச் சேர்ந்த சில அமைப்புகள் தன்னிச்சையாகச் செயல்பட்டு தயாரிப்பாளர்களுக்கு படப்பிடிப்புகளில் பொருளாதார இழப்பையும், பேச்சுவார்த்தை என்ற பெயரில் மனஉளைச்சலையும் கொடுத்து வருகின்றன.

இனிமேலும் தயாரிப்பாளர்களை சங்கம் கைவிட முடியாது. சம்மேளனமோ, தொழிலாளர்களோ தயாரிப்பாளர்களின் எதிரிகள் அல்ல. உழைக்கும் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவது தயாரிப்பாளர்களின் கடமை.

அதே வேளையில் அநியாயமான முறையில் தயாரிப்பாளர்கள் நஷ்டப்படுவதையும் ஏற்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டு தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயிக்கும் சம்பள பட்டியல்படி தயாரிப்பாளர்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு சம்பளம் தர வேண்டும். தயாரிப்பாளர்கள் தங்களுக்கு உடன்படும் யாருடனும் தேவையான அளவில் நபர்களை வைத்து பணிகளை மேற்கொள்ளும்படி தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொள்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com