தயாரிப்பாளர் ஃபெப்ஸி பிரச்னை: பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும்

ஃபெப்ஸி தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும் என ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
தயாரிப்பாளர் ஃபெப்ஸி பிரச்னை: பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும்

ஃபெப்ஸி தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும் என ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: தயாரிப்பாளர்களுக்கும் ஃபெப்ஸி தொழிலாளர்களுக்குமிடையே சமீபமாக பகைமை போல் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மாயத் தோற்றமே என்பதை காலம் விரைவில் உணர்த்தும். தயாரிப்பாளர்களைப் போல் தொழிலாளர்களும் ஒரு சினிமா உருவாக்கத்துக்கு முக்கியமானவர்கள். தற்போது இரு அமைப்புகளுக்கும் இடையே சிலர் பகைமை உணர்வை வளர்க்கப் பார்க்கிறார்கள்.
25 ஆயிரம் தொழிலாளர்கள் கொண்ட ஃபெப்ஸி அமைப்பை உடைப்போம் என சிலர் பேசி வருகிறார்கள். இதனால் உணர்ச்சிவசப்பட்டு சில உறுப்பினர்கள் தரம் தாழ்ந்த வார்த்தைகளை பிரயோகித்துள்ளனர். இதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இரு அமைப்புகளும் சுமுகமாக இயங்க வழி வகை செய்ய வேண்டும். இரு தரப்பிலும் நிலவி வரும் அனைத்துப் பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com